விராட் கோலி – அனுஷ்கா தம்பதியினருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், இந்த தம்பதியும், அவர்களது குடும்பத்தினரும், இருவரின் ரசிகர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கிறார்கள்.

நடிகை அனுஷ்கா சர்மாவும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் கந்த 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர்சில மாதங்களுக்கு முன் அனுஷ்கா கர்ப்பிணியாக இருப்பதை உறுதி செய்திருந்தார். கர்ப்பமாக இருப்பது தொடர்பாக பல்வேறு தகவல்களை அனுஷ்மா சர்மா தன்னுடைய சமூக வலைத்தளங்களில் அவ்வவ்போது பதிவிட்டு வந்தார். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் படங்களும் ட்விட்டரில் அதிக அளவில் பகிரப்பட்டது.

இந்நிலையில், அனுஷ்கா சர்மாவுக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை, விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியோடு அறிவித்திருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.