வந்தவாசியில் மேல் மாடி வீட்டில் இருந்து சிறுமி தவறி விழுந்து உயிரிழப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கே.ஆர்.கே தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர், அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வரும் இவர் மேல் மாடியில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது மகள் புவனேஸ்வரி 15 (மனநலம் குன்றியவர்) மேல் மாடி வீட்டின் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தவர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

image

இதையடுத்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வந்தவாசி தெற்கு காவல்நிலைய போலீசார் புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேல் மாடி வீட்டில் இருந்து தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.