சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

திறந்தவெளியில் 50 சதவிகிதம் பேர் வரை பங்கேற்கும் விதமாக, அரசியல், மதம், கல்வி சார்ந்த கூட்டங்களை நேற்று முதல் நடத்திட தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று தனது சொந்த ஊரான எடப்பாடியிலிருந்து சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையை தொடங்கினார். இந்நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.

image

சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. திமுகவின் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்களும் பங்கேற்பர் என பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை 10 மணிக்கு ஸ்டாலின் அறிவாலயம் வந்தார். அதன்பின்னர் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. இதில் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அது, மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள இருக்கும் தேர்தல் பரப்புரை குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ஸ்டாலின்தான் வாராரு விடியல் தரப்போறாரு” என்ற பெயரில் அந்தப் பரப்புரைப் பயணம் இருக்கும் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக காலை முதலே அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் குவிந்தனர். பேனர்கள், கோஷங்கள் என அறிவாலயம் களைகட்டியது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.