ஆஸ்திரேலிய பந்துவீச்சில் திணறிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தது.

அடுத்ததாக பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு மோதலாக அடிலெய்டில் நேற்று தொடங்கியது. 

image

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 89 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் விருத்திமான் சகா 9 ரன்களும், ஆர்.அஸ்வின் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இரண்டாம் நாளான இன்று, 15 ரன்கள் எடுத்த நிலையில் முதல் ஓவரில் அஸ்வின் ஆட்டமிழந்தார். அஸ்வினை தொடர்ந்து சாஹா 9, உமேஷ் யாதவ் 6, ஷமி 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதை அடுத்து முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

ஆஸ்திரேலியா அணியின் சார்பில் அதிகபட்சமாக ஸ்டார்க்  4 விக்கெட்டுகளும்,  பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.