பிக்பாஸ் சீசன் 4-ன் இந்த வார எவிக்ஷனில் நடிகை சனம் ஷெட்டி எலிமினேட் ஆகி ஷோவிலிருந்து வெளியேறியுள்ளார்.
முன்னதாக கமல் கலந்து கொள்ளும் வார இறுதி எபிசோடுகளுக்கான ஷூட்டிங் இன்று (4/12/20) மதியம் ஈவிபி-யில் உள்ள பிக்பாஸ் செட்டில் தொடங்கியது.
ஆரி, ரம்யா, ஷிவானி, நிஷா, ஆஜித், சனம், அனிதா ஆகியோர் இந்த வார வெளியேற்றத்துக்கான நாமினேஷனில் இருந்தார்கள்.
இவர்களில் ரசிகர்களிடமிருந்து வாங்கிய வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால் அனிதாதான் மிகவும் குறைவான வாக்குகள் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது அவர்தான் வெளியேற வேண்டியவராம்.
ஆனாலும், சனம்தான் வெளியேறிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சனம் எவிக்ட் ஆன எபிசோடு நாளை இரவு ஒளிபரப்பாக உள்ளது.
இதேபோல் கடந்த வாரமும் ’ஜித்தன்’ ரமேஷ்தான் வெளியேற வேண்டியவர்; சில சர்ச்சையான வார்த்தைகளைப் பேசியதால் கமலின் அழுத்தத்தால் சம்யுக்தா வெளியேற்றப்பட்டார் என்றார்கள்.
“சனத்துடன் ஒப்பிடுகையில் அனிதா கன்டென்ட் தருவதாக நம்புகிறார்கள் போல” என்கிற பிக்பாஸ் விமர்சகர்கள், ‘‘பிக்பாஸ் போங்காட்டாம் ஆடுகிறார்” என்கிறார்கள்.