கொரோனாவிலிருந்து அறிவியல் காப்பாற்றவில்லை; விவசாயிகள்தான் காப்பாற்றினார்கள் என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக சார்பாக எம்.பி கனிமொழி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று ஈரோடு தெற்கு மாவட்டத்தில் , ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அங்கு விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் மத்தியில் உரையாற்றியுள்ளார். அப்போது ஊத்துக்குளியில் பேசிய கனிமொழி, விவசாயிகள் இல்லை என்றால் கொரோனாவால் அல்ல; பசியால் இறந்திருப்போம் என்று பேசியுள்ளார். விவசாயிகளுக்காக போராடக்கூடிய இயக்கம்தான் திமுக என தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.