4 மாணவர்களுக்கு கொரோனா!
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக கலந்தாய்வில் கலந்துகொள்ள வந்திருந்த மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று கலந்தாய்வில் பங்கேற்ற 262 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டத்தில் நான்கு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.