பப்ஜி கேமிற்கு அடிமையான சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

image

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் கந்தவேல். இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் அருண் (16). ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், தொடர்ந்து செல்போனில் பப்ஜி கேம் விளையாடியதால் மனநலம் பாதிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து கோவை சூலூரில் உள்ள மனநல மருத்துவமனையில் தங்கி இரண்டு மாதங்களாக அருண் சிகிச்சை பெற்று வந்தார்.  புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள கள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள தனது தோட்டத்து பண்ணைவீட்டில் கந்தவேல் கடந்த மூன்று மாதங்களாக குடும்பத்துடன் வசித்து வந்தார்.

 

image

இந்நிலையில் நேற்று இரவு அருண் தனியாக இருக்கும் அறையில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த புஞ்சை புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை – 600 028.
தொலைபேசி எண் – +91 44 2464 0050, +91 44 2464 0060

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.