உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், ஹத்ராஸ் வழக்கை விசாரிக்க நியமித்திருந்த சிறப்பு விசாரணைக் குழுவைச் சேர்ந்த புஷ்பா பிரகாஷ் என்ற பெண் அதிகாரி அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உன்னாவில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் பணிபுரிந்துவரும் போலீஸ் டிஐஜி சந்திரபிரகாஷ். இவர் குடும்பத்தினருடன் சுஷாந்த் கோல்ஃப் சிட்டியில் வசித்துவந்தார். இவருடைய மனைவி புஷ்பா பிரகாஷ்(36 வயது). இவர்களுக்கு 7வயது, 11 வயது மற்றும் 13 வயதில் மூன்று பெண்குழந்தைகள் இருக்கின்றனர்.
தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தாலி செயின் பறிப்பு – பீதியில் பெண்ணாடம் மக்கள்
காலை சந்திர பிரகாஷ் வேலைக்கு சென்றபின்பு புஷ்பா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் தெற்குப் பகுதி ஆணையாளர், சுஷாந்த் கோல்ஃப் சிட்டி ஆணையாளர் சச்சின் சிங் ஆகியோரும் சம்பவ இடத்திற்குச் சென்று, இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு கொடுத்த தகவலில் தெரிவித்திருக்கின்றனர்..