புனேயில் ஒரு பெண், கணவருடன் நடந்த சண்டையால் தனது குழந்தையைக் கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

புனேயில் உள்ள ராஜ் குருநகர் பகுதியைச் சேர்ந்தவர் யோகிதா பாகல்(32 வயது). அந்தப் பெண்ணின் கணவர் அமித் (28) கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வேலையிழந்துவிட்டார். இதனால் தனது சொந்த ஊருக்குச் சென்றுவிடலாம் என தனது மனைவியை அமித் வற்புறுத்தியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த யோகிதா தனது குழந்தை காவ்யாவை(ஒன்றரை வயது) கொன்றுவிட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். வெளியே சென்றிருந்த கணவர் அமித், வீட்டிற்கு வந்து நீண்ட நேரமாக கதவைத் தட்டிக்கொண்டே இருந்திருக்கிறார். ஆனால் கதவுத் திறக்கப்படாததால், அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

image

போலீஸார் முன்னிலையில் கதவு உடைக்கப்பட்டபோது, அந்தப் பெண்ணும், குழந்தையும் தூக்கில் தொங்கியிருக்கின்றனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்தபோது, அந்த பெண்ணின் கணவருக்கு வேலை இல்லாத காரணத்தினால் கிராமத்திற்கு செல்லவேண்டும் என்று கூறியதால் இருவருக்கு இடையே கடந்த சில வாரங்களாக சண்டை ஏற்பட்டிருக்கிறது. அதனால் அந்தப் பெண் இந்த விபரீதமுடிவை எடுத்திருப்பதாக கணவர் கூறியிருக்கிறார். இதுகுறித்து விசாரித்து வருவதாக போலீஸார் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு கொடுத்த தகவலில் தெரிவித்திருக்கின்றனர்.

மனைவி இறந்த சோகம்… குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவர் 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.