ஷார்ஜாவில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மும்பை அணி.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார் மும்பையின் கேப்டன் ரோகித் ஷர்மா.
இருபது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது மும்பை.
மும்பை அணிக்காக டிகாக் (67 ரன்கள்), கிஷன் (31 ரன்கள்), ஹர்திக் பாண்டியா (28 ரன்கள்) மற்றும் குருனால் பாண்டியா (20 ரன்கள்) மாதிரியான பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனையடுத்து ஹைதராபாத் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்டது.
ஓப்பனிங் பேட்ஸ்மேன் பேர்ஸ்டோ 25 ரன்களில் வெளியேற வார்னர் பொறுப்போடு ஆடினார்.
மணீஷ் பாண்டே தன் பங்கிற்கு 30 ரன்களை குவித்திருந்தார். பின்னர் களம் இறங்கிய வில்லியம்சன்னும், பிரியம் கார்கும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
வார்னர் 60 ரன்களில் அவுட்டானார்.
ஓவருக்கு இருபது ரன்களுக்கு மேல் தேவைப்பட அதை எடுக்க முடியாமல் தடுமாறி வீழ்ந்தது ஹைதராபாத்.
இருபது ஓவர் முடிவில் 174 ரன்களை குவித்து 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது ஹைதராபாத்.