தூபாயில் நடைபெற்று வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த சீஸனின் பத்தாவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
இதனால் விராத் கோலி தலைமையிலான பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இரு அணிகளுமே இந்த ஆட்டத்தில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய வேண்டுமென்ற முனைப்போடு விளையாடி வருகின்றன.