தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரின் உடல்நலம் குறித்து அரசியல்வாதிகளும் சினிமாத்துரையினரும் நலம் விசாரித்துவரும் நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அன்புள்ள கேப்டன்!
உங்கள் துணிச்சலும்,
‘மதுரைக்காரன்’ என்று கருதும்
மன உறுதியும், மருத்துவத்தின் உறுதுணையும் இந்த நோயிலிருந்தும் உங்களை மீட்டெடுக்கும்;
வாழ்த்துகிறேன்.@iVijayakant #விஜயகாந்த்— வைரமுத்து (@Vairamuthu) September 24, 2020
அந்தப் பதிவில், ”அன்புள்ள கேப்டன்! உங்கள் துணிச்சலும், ‘மதுரைக்காரன்’ என்று கருதும் மன உறுதியும், மருத்துவத்தின் உறுதுணையும் இந்த நோயிலிருந்தும் உங்களை மீட்டெடுக்கும்; வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.