குஜராத் மாநிலம், வடோடாரா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நாயை கொடூரமாகத் தாக்கி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் ஏரியில் வீசியிருக்கிறார் அரசு அதிகாரி.
பல்வந்த் கோஹில் என அடையாளம் காணப்பட்ட இந்த அரசு அதிகாரி, இதற்குமுன்பே 4 தெருநாய்களை கொடூரமாகக் கொன்றுள்ளதாக அருகில் வசிப்பவர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால், அந்த நபர் மோசமானவராக இருந்ததாலும், மேலும் தான் ஒரு அரசு அதிகாரி என மிரட்டியதாலும் இதுபற்றி போலீஸில் புகார் கொடுக்க பயந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்தமுறை அவரின் செயலைப் பொறுத்துக்கொள்ள முடியாத அண்டைவீட்டுக்காரர்கள் புகார் கொடுக்க முன்வந்திருக்கின்றனர்.
பிரிந்துபோன மனைவி, மழையில் நாசமான பயிர்கள்… சோகத்தில் விஷம் குடித்த விவசாயி
பிரசாந்த் கோஹில் என்ற பக்கத்து வீட்டுக்காரர் மற்றும் சிலரை சேர்த்துக்கொண்டு, குஜராத் விலங்குகள் கொடுமையை தடுக்கும் அமைப்பிடம் தகவல் கொடுத்திருக்கின்றனர். இதுதவிர, வடோடரா காவல் நிலையத்திலும் இதுகுறித்து புகார் கொடுத்திருக்கின்றனர்.
மேலும், காயமடைந்த நாயை காரில் கட்டிவைத்து அடித்து உதைத்ததையும் புகைப்படம் எடுத்து ஆதாரத்தையும் கொடுத்துள்ளார். மேலும் சில ஆதாரங்கள் கிடைத்தபின் அவர்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் துணை ஆய்வாளர் ஜெய்தீப் சிங் சர்வையா கூறியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியில் கூறியிருக்கிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு, 25 வயது நபர் ஒருவர் ஒரு நாயைக்கொன்று போபால் ஏரியில் தூக்கி வீசிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியான பிறகு, அவரை இந்திய சட்டப்பிரிவு 429இன் கீழ் போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
மனிதர்களுக்கு இடையிலான பகையில் ஆடுகளுக்கு விஷம் வைத்து கொலை: திருச்சியில் சோகம்