பீகார் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகுமா?

இந்தியத் தேர்தல் ஆணையம்

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டபேரவைக்கு வருகிற அக்டோபரில் தேர்தல் நடத்தப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் டெல்லியில் இன்று மதியம் 12.30 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துகிறது. இதனால் பிகார் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. தமிழகத்திலும் காலியாக இருக்கும் சட்டப்பேரவை தொகுதி, கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி ஆகியவற்றுக்கும் அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,052 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது 58,18,571 -ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,141 மரணங்கள் கொரோனா காரணமாக நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பலி எண்ணிக்கை 92,290 -ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரை 47,56,165 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.