தமிழகத்தில் முதல்முறையாக அம்மா நகரும் நியாயவிலை கடை திட்டத்தினை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

ரூ. 9 கோடியே 66 லட்சம் மதிப்பில், நாகையில் 262 கடைகள், திருவண்ணாமலையில் 212 கடைகள், கிருஷ்ணகிரியில் 168 கடைகள் உள்பட தமிழகம் முழுவதும் மூவாயிரத்து 501 நகரும் நியாய விலை கடைகள் தொடங்கப்பட உள்ளன. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நகரும் நியாயவிலை கடை வாகனத்தை முதலமைச்சர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

மலைப்பாங்கான பகுதிகள் உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நகரும் நியாயவிலை கடைகள் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.