விஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தை இயக்கிய பாபு சிவன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 54.

சென்னை தாம்பரத்தில் வசித்து வந்த பாபுசிவன், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்புக்காக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

image

அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். பிரபல இயக்குநர் தரணியின் உதவியாளராக இருந்தவர் பாபுசிவன். விஜய் நடித்த குருவி திரைப்படத்தின் வசனங்களை பாபுசிவன் தான் எழுதியிருந்தார். 2009 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில், விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ திரைப்படத்தை இயக்கினார் பாபுசிவன்.

இன்றளவும் ரசிகர்கள் கொண்டாடும் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘வேட்டைக்காரன்’ விளங்குகிறது. தொடர்ந்து திரைப்பட வாய்ப்பு கிடைக்காமல், ‘ராசாத்தி’ என்ற தொலைக்காட்சி தொடரை இயக்கினார் பாபுசிவன்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.