சூதாட்டப் புகாரில் சிக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தின் தடைக்காலம் இன்றோடு நிறைவடைகிறது.

image

இதன் மூலம், கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஸ்ரீசாந்த் தகுதி பெற்றுள்ளார். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஸ்பாட் பிக்சிங் எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் மீது குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

image

பின்னர், இந்தத் த‌டைக் காலம் ஏழு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. தடைக்குப் பின் உள்ளூர் போட்டிகளில் விளையாட ஆவலாக இருப்பதாக ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். ஸ்ரீசாந்த் உடல்தகுதியை எட்டும் பொருட்டு, அவரது சொந்த மாநிலமான கேரளாவிற்காக ரஞ்சித் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.