கேரளாவில் உள்ளாட்சித் தோ்தலை தள்ளிவைக்கவும், சட்டப்பேரவை இடைத்தேர்தலை ரத்து செய்யவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக் காலம், வரும் நவம்பா் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. எனவே, நவம்பரில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த அம்மாநில தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதேபோல், காலியாகவுள்ள குட்டநாடு, சவரா ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில், வரும் நவம்பரில் இடைத்தோ்தல் நடத்தப்படும் என்று இந்திய தோ்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.

இந்தச் சூழலில் திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கொரோனா பரவல் காரணமாக, உள்ளாட்சித் தோ்தலை ஒத்திவைக்குமாறு மாநில தோ்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

இதேபோல், இரு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தோ்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தலைமை தோ்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கவும் கூட்டாக முடிவு செய்யப்பட்டது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.