உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் துப்பாக்கியை காட்டி நகைக்கடையில் கொள்ளையடிக்கும் சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
அலிகாரில் உள்ள ஒரு நகைக்கடையில் வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. அப்போது மூன்று பேர் மிகவும் சாதாரணமாக முகக்கவசம் அணிந்துகொண்டு, கடையில் நுழைந்து சானிடைசரால் தங்கள் கைகளைத் தூய்மைப்படுத்துகிறார்கள். அதன்பின் சில விநாடிகள் கழித்து, அவர்களில் ஒருவன் திடீரென்று இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை எடுக்கிறான். பின்னர் துப்பாக்கியை காட்டி மிரட்டியபடியே கடையில் உள்ள நகைகளை அவர்கள் கொள்ளையடிக்கத் தொடங்குகிறார்கள், இவை அனைத்தும் அந்த நகைக்கடையின் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இப்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#WATCH Three armed men wearing masks robbed a jewellery store in Aligarh, earlier today. pic.twitter.com/eN9NIGv84l
— ANI UP (@ANINewsUP) September 11, 2020