பிரதமரின் வீடு கட்டித்தரும் திட்டத்திலும் தமிழகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்திருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

image

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்  “பிரதமரின் வேளாண்மை நிதி உதவி திட்டத்தைப்போல பிரதமரின் வீடு கட்டித்தரும் திட்டத்திலும்(Pradhan Mantri Awas Yojana)தமிழகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்திருப்பதாக அடுத்தடுத்த செய்திகளாக வெளிவருகின்றன. உயிரோடு இருப்பவர்களின் பெயரில் அவர்களுக்கே தெரியாஅல் வீடு கட்டிக் கொடுத்ததாக பணம் கையாடல் செய்ததாக மட்டுமின்றி, இறந்தவர்களின் பெயராலும் இந்த மோசடி நிகழ்த்தப்பட்டதாக செய்திகள் வருகின்றன.

ஏழை, எளிய மக்களின் நலனுக்கான இத்தகைய திட்டங்களில் மனசாட்சியின்றி செய்யபட்டுள்ள முறைகேடு குறித்தூரிய விசாரணை நடத்துவதையும் , அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதையும் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் தாமதமின்றி உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.