அடுத்த சில நாட்களில் துபாயில் ஆரம்பமாக உள்ள 2020 ஐ.பி.எல் தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியோடு விளையாட உள்ளது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

image

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரிலிருந்து சி.எஸ்.கே அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பியுள்ள நிலையில் அவரது இடத்தில் யார் விளையாடுவார்கள் என்ற விவாதம் தற்போது ஹாட் டாபிக்காக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் ரெய்னா இடத்தில் ராயுடு விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார் நியூசிலாந்து மற்றும் சி.எஸ்.கே அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ். 

“அந்த இடத்தில் அம்பாதி ராயுடுவை விளையாட செய்வது தான் சரியாக இருக்கும் என நான் நினைக்கிறன். ரெய்னா சி.எஸ்.கே அணியில் இல்லாதது பேட்டிங் லைனில் கொஞ்சம் பின்னடைவு தான். இருந்தாலும் ராயுடு மூன்றாவது பேட்ஸ்மேனாக இறங்கி விளையாடும் திறன் கொண்டிருப்பவர். 2018இல் சி.எஸ்.கே அணிக்காக அவர் ஆடிய ஆட்டமே அதற்கு சான்று” என தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் அவர்.

image

அதே நேரத்தில் அனுபவ வீரர் ஹர்பஜன் இல்லாதது பவுலிங் யூனிட்டில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் அவர் சொல்லியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.