மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம் என்பவரின் 19 வயது மகள் ஜோதி துர்கா நீட் தேர்விற்கு தயாராகி வந்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில், இந்தாண்டு நீட் தேர்விற்கு தயாராகி வந்தார். நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவி ஜோதி துர்கா தற்கொலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற்று வந்த அரியலூர் மாவட்டம் எலந்தங்குழியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் மன உளைச்சல் காரணமாக செப்டம்பர் 9-ம் தேதி அன்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சோகம் அடங்குவதற்குள் மற்றொரு மாணவரும் உயிரை மாய்த்துக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ எனும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.