ஊரடங்கு நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் சனிக்கிழமையன்று வருகை தந்த பக்தர்கள் உண்டியலில் அளித்த நன்கொடையின் மதிப்பு ரூ. 1.02 கோடி என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த கோயில், பக்தர்களுக்காக ஜூன் 11 ம் தேதி முதல் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன.

image

இந்த நிலையில், வார விடுமுறை நாட்களில் 13,486 பக்தர்கள் வருகைதந்த நிலையில் முதன்முறையாக சாதனை அளவாக உண்டியல் மூலம் ஒரு கோடி ரூபாய் நன்கொடையாகக் கிடைத்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.