மதுரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ‘முதல்வரை மனித கடவுளே’ எனக் குறிப்பிட்டு மாணவ அமைப்பினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

image

அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கல்லூரிகளில் அரியர் வைத்திருந்த மாணவர்களை தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார். இதற்கு மாணவர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு இருந்தது. சிலர் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் போஸ்டர்களை தயார் செய்து வெளியிட்டனர். இதனையடுத்து மாணவர்களின் மன உளைச்சலை போக்குவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முதல்வர் விளக்கமளித்தார். 

image

இந்நிலையில் மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில்  ”மாணவர்களின் மனித கடவுளே எங்கள் ஓட்டு உங்களுக்கே” என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை தமிழ்நாடு மாணவர்கள் முன்னேற்ற அமைப்பினர் ஒட்டியுள்ளனர். 

image

அந்தப் போஸ்டரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மாணவர்கள் ஒன்றிணைந்து நன்றி செலுத்துவது போன்ற புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.