வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாக உள்ள நடப்பு சீசனுக்கான ஐ.பி.எல் தொடரில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐக்கிய அமீரகத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.

image 

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து 2020க்கான ஐ.பி.எல் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடத்துவதற்கான முடிவை எடுத்தது பி.சி.சி.ஐ. 

அதற்கான அனுமதியை மத்திய அரசிடம் பெற்ற சூழலில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எட்டு அணி வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினருக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது பி.சி.சி.ஐ. 

குறிப்பாக ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கொரோனா பரிசோதனை செய்த பிறகு, அதன் முடிவுகளை பொறுத்தே வீரர்கள் இந்தியாவிலிருந்து அமீரகம் புறப்பட முடியும் என தெரிவித்திருந்தது.

image

அதன்படி அனைத்து அணி வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் கடந்த வாரம் சென்னைக்கு  வந்து  பயிற்சிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இன்று தோனி தலைமையில் சென்னை அணியின் சேனைகளான ரெய்னா, ஜடேஜா, சாஹர் உட்பட வீரர்களும், அணி நிர்வாகிகளும் சென்னையிலிருந்து அமீரகம் புறப்பட்டுள்ளனர்.

image

ஹர்பஜன் சிங் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் நேரடியாக அணியினரோடு இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.