ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பப் ஹோட்டலில் ஈமு பறவைகள் உள்ளே நுழைந்து அழிவை ஏற்படுத்துவதைத் தடுக்க தடைகளை அமைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு மாநிலம் குயின்லாண்ட். இங்கு புறநகர் காவல் பகுதியான யராகாவில் ஒரு ஹோட்டலில் இருந்து உணவை திருட ஈமு பறவைகள் ஆர்வமுடன் சுற்றித் திரிவதால் உள்ளூர் மக்களும், சுற்றுலா வாசிகளும் கலக்கமடைந்துள்ளனர்.
கடந்த வாரம் யராகாவில் உள்ள ஒரு ஹோட்டலின் படிக்கெட்டுகளில் இரண்டு ஈமு பறவைகள் ஏறிச் சென்றுள்ளது. ஹோட்டலின் உள்ளே இந்த பறவைகள், வரும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது.
யராகா ட்ரெய்லர் பூங்காவில் தங்கியிருக்கும் இந்த ஈமுக்கள், ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களின் பார்பிக்யூ தட்டிலிருந்து வறுத்த முட்டை போன்ற உணவுகளை எடுத்து உண்பதாகவும், கதவுகளின் மேல் சாய்ந்து நின்றுகொண்டு தனது நீண்ட கழுத்தை உள்ளே நீட்டி டோஸ்டரில் இருக்கும்போதே உணவுகளை பறித்துத் திண்பதாகவும் அங்கு வேலை செய்வர்களும் வாடிக்கையாளர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கதவின் அருகே மேஜைகளில் காபி கப்புகள் வைத்திருந்தால் காபியை உறிஞ்சி குடித்துவிட்டு வெறும் கப்பை விட்டுச் செல்வதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனால் அவதிப்படும் ஹோட்டல் நிர்வாகம், ஈமுக்களை தடை செய்ய ஒரு யுக்தியை கையாண்டுள்ளது. இங்கு பணிபுரியும் கிம்ப்ளெட் என்பவர் மாடிப்படிகளின்மேல் ஒரு கயிற்றைக் கட்டி சிக்கலைத் தீர்த்துள்ளார். கயிற்றின் கீழே நுழைந்து உள்ளே செல்லும் அளவிற்கு ஈமுக்கள் புத்திசாலிகள் இல்லை என்பதை தெரிந்துகொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். ஈமுக்களுக்கு பயம் வரும்போது அவைகள் முன்னோக்கி செல்லும். ஆனால் பொதுவாக பின்னால் பார்க்கும் பழக்கமும் உள்ளது. அதனால் அதற்கு குழப்பம் ஏற்பட்டு எல்லோரும் எங்கே செல்கிறார்கள் என புரிந்துகொள்ள முடியாது என்கிறார் அவர்.