நெல் அறுவடை இயந்திரம் மோதி இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

image

விழுப்புரம் மாவட்டம் அருள்நாடு கிராமத்தைச் சேர்ந்த பால்ஞானதாசன் மற்றும் அவரது நண்பர் சத்தியசீலன் ஆகியோர் மேல்மலையனூர் தாலுகா பெருவளூர் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நெல் அறுவடை வாகனம் குறுக்கே வந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாகத் தெரிகிறது. இதில் பால்ஞானதாசன் என்பவர் தலைதுண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சத்திய சீலன் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தகவலறிந்து வந்த விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். நெல் இயந்திரத்தை இயக்கிய பிரபாகரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.