சினிமாவில் நடிகை அனுஷ்கா அறிமுகமாகி பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. நாகார்ஜூனாவுடன் சேர்ந்து தெலுங்குப் படம் ஒன்றில் அவர் நடித்த ஆண்டு 2005. இப்போது அவர் திரைவாழ்வில் பதினைந்து ஆண்டுகளைக் கடந்திருக்கிறார். இதற்காக அவரது ரசிகர்கள் அனுஷ்காவின் பெயரில் சமூக வலைத்தளங்களில் ஹேஸ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகிறார்கள். ட்விட்டரில் அந்த ஹேஸ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்டாக்கியும் வருகிறார்கள்.
இதனிடையே “எப்போதும் உங்களுக்கு நன்றி. அளவற்ற அன்பும் நிபந்தனையற்ற ஆதரவும் வழங்கும் உங்கள் அனைவருக்கும் என் இதயபூர்வமான ஒரு பெரிய நன்றி” என்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அனுஷ்கா, இந்த கொரோனா தொற்று காலத்தில் மிகவும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.