திருவாரூர் அருகே கடன் தொல்லையால் குடும்பத் தலைவி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடனை கேட்டு நிதி நிறுவனம் நெருக்கடி கொடுக்கிறது என அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

திருவாரூர் அருகே பேரளம் ஐயனார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி தனலட்சுமி (35). இவர்களுக்கு அபிநயா (12), மாதேஷ் (8) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஐயப்பன் தச்சு வேலை செய்து வருகிறார். இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் சொந்த வீடு கட்டியுள்ளனர். இதற்காக தனியார் வங்கி மற்றும் நிதி நிறுவனத்திடம் கடன் பெற்றுள்ளனர். அதற்கான கடன் தவணையையும் மாதம் தோறும் கட்டி வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஊரடங்கு உத்தரவால் ஐயப்பனுக்கு வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் அன்றாட செலவுகளுக்கு பரிதவித்த நிலையில் வாங்கிய கடனை மாதந்தோறும் செலுத்த முடியவில்லை எனத் தெரிகிறது. 

வங்கியில் வேலை செய்த பெண் ஊழியர் திடீர் தீக்குளிப்பு - lifeberrys.com Tamil  இந்தி

பணம் கொடுத்தவர்களின் நெருக்கடியை சமாளிக்க முடியாத நிலையில் மன அழுத்தத்திலிருந்த ஐயப்பனின் மனைவி தனலட்சுமி வீட்டில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை ஆபத்தான நிலையில் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவருக்கு 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பேரளம் போலீசார் தனலட்சுமியிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர்.

6 மாத குழந்தையுடன் தாய் தீக்குளிப்பு.. மதுரையில் சோகம் | Mother suicide  with six month daughter in Madurai | Puthiyathalaimurai - Tamil News |  Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

அதில் தனியார் நிதி நிறுவனத்திடம் வாங்கிய கடன் தொகையை கேட்டு நெருக்கடி செய்ததால் மனம் உடைந்து தீக் குளித்ததாக தெரிவித்துள்ளார். மகளிர் சுய உதவி குழு கடன், மற்றும் வங்கி கடன் தவணைகளை வசூலிக்க கட்டாயப்படுத்தக் கூடாது என அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.