கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கான இந்தியா குளோபல் வீக் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “எந்த சோதனையாக இருந்தாலும் அதில் இருந்து இந்தியா மீண்டு வரும் என்பது வரலாறு. மக்களின் சுகாதார நலனை போல பொருளாதார நிலையிலும் இந்தியா அக்கறை கொண்டுள்ளது. வேளாண் பாதுகாப்பு துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் முதலீடுக்கு உகந்ததாக உள்ளன. இந்தியாவில் வளர்ந்து வரும் பல்வேறு துறைகளில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
கொரோனா நோய்க்கு எதிராக இந்தியா ஒரு வலுவான போரை நடத்தி வருகிறது. இந்திய மருத்துவத்துறை ஒட்டுமொத்த உலகத்துக்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறது. கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதிலும் உற்பத்தியிலும் இந்தியாவின் பங்கு மிகப் பெரியதாக இருக்கும். கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன் மற்ற நாடுகளுக்கும் வழங்கப்படும்.
வீட்டு வாடகை கேட்டதில் வாக்குவாதம்: உரிமையாளரை ஓட ஓட விரட்டி குத்திக்கொலை செய்த நபர்!
இலவச சமையல் எரிவாயு, உணவுப்பொருட்கள், கடன் ஆகியவை பயனாளர்களுக்கு சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு சிறப்பு நிதி நேரடியாக சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேரிடர் காலத்தில் நாட்டு மக்களுக்கு தேவையான சலுகைகளை மத்திய அரசு வழங்கியிருக்கிறது” எனத் தெரிவித்தார்.