மதுரையில் ஜூலை 6 ஆம் தேதி முதல் 12 தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மேலும் 7 நாட்களுக்கு அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை பேரூராட்சி, பரவை எல்லை ஆகியப் பகுதிகளில் முழு முடக்கம் மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
முழு முடக்க காலத்தில் முன்னதாக அறிவிக்கப்பட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தத் தேவைகளுக்கும் அனுமதி கிடையாது என்றும் அதற்கான பொறுப்பை அந்தந்த ஊராட்சி அமைப்புகள் உறுதி செய்யும்.”என முதல்வர் அறிவித்துள்ளார்.