கனிமொழி எம்.பி வீட்டிற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என காவல் ஆணையர் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை சிஐடி காலனியில் உள்ள தூத்துக்குடி எம்பி கனிமொழி வீட்டிற்கு தினமும் ஒரு ஏட்டு தலைமையில் 4 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து கனிமொழி வீட்டிற்கு வழங்கி வந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக செய்திகள் வெளியாகின. கனிமொழிக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லாததாலும், கொரோனா காலத்தில் காவல்துறையின் தேவை அதிகரித்துள்ளதாலும் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் விளக்கம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. 

image

கோவில்பட்டி கிளைச் சிறையில் மேலும் ஒரு விசாரணைக் கைதிக்கு உடல்நலக் குறைவு

இந்நிலையில் இது குறித்து வேப்பேரியில் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் விஸ்வநாதன், சென்னை சிஐடி காலனியில் உள்ள கனிமொழி வீட்டிற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் திணறும் தலைநகர் டெல்லி !

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். காவல்துறையினர் தாக்கியதில் இந்த உயிரிழப்பு நடந்திருக்கும் என சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறை டிஜிபியிடம் கடந்த 23-ஆம் தேதி கனிமொழி புகார் மனு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.‌

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.