பேஸ் ஆப் செயலி மூலம் இந்திய கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்களை பெண்ணாக மாற்றி, யுவராஜ் சிங் ஒரு விளையாட்டு விளையாடியுள்ளார்.
முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் அண்மையில் பேஸ் ஆப் செயலி மூலமாக தற்போது உள்ள இந்திய அணி வீரர்களான தோனி, விராட் கோலி, புவனேஷ்குமார், சாஹல் உள்ளிட்ட வீரர்களை பெண் வடிவத்தில் மாற்றி ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். மேலும் இதில் நீங்கள் யாரைப் தோழியாக ஏற்க விருப்பப்படுகீறீர்கள் என்று அவரைப் பின் தொடர்பவர்களுக்கு ஒரு கேள்வியையும் முன்வைத்தார். இதற்கு பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
View this post on InstagramWho will you select as your ?♀️ girlfriend’? ?? I will reply tomorrow ?
இதனைத்தொடர்ந்து இந்திய வீரர் ஹர்பஜன் சிங் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்திய அணி வீரர்களாக இருந்த சச்சின், யுவராஜ், கங்குலி உள்ளிட்டோரை பேஸ் ஆப் மூலம் பெண்ணாக மாற்றி இதில் நீங்கள் யாருடன் டேட் செய்ய ஆசைப்படுகீறீர்கள் எனக் வீரர்களுக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு வீரர்கள் பலரும் தற்போதைய பிசிசிஐத் தலைவர் கங்குலியைக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் யுவராஜ் சிங் இந்த பேஸ் ஆப் சவாலில் புவனேஷ் குமார் வெற்றியாளர் என அறிவித்தார். ஹர்பஜன் சிங்கும் புவனேஷ்குமார்தான் மிகவும் கவர்ச்சியாக இருப்பதாக ஒத்துக்கொண்டார். இந்தப் பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.