இந்தியாவில் 4.5 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,25,282லிருந்து 4,40,215 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 14,933 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Also Read: இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை எப்போது ஏற்படும்?

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 312 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,699-லிருந்து 14,011 அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,48,190 ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனா

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 91,85,974 ஆக உயர்ந்திருக்கிறது. தொற்று பாதிப்பில் இருந்து 49,21,380 பேர் குணமடைந்திருக்கிறார்கள். உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,74,257ஆக உயர்ந்துள்ளது.

Also Read: உ.பி அரசு காப்பக சர்ச்சை: 57 சிறுமிகளுக்கு கொரோனா; 7 சிறுமிகள் கர்ப்பம்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.