தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியாவில் 4.25 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 445 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரே நாளில் 14,821 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,699 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

image

தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,087 ஆக உள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 794 ஆக உள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34,112 ஆக உள்ளது. இதனிடையே தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மட்டும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

image

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.