சென்னையில் இன்று ஒரு நாளில் மட்டும் இதுவரை கொரோனா தொற்றுக்கு 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. கடந்த சில நாட்களாக கொரோனாவால் நாள் தோறும் 1500 பேருக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல், முன்னெப்போதும் இல்லாத வகையில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

image

இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனா நோய் தொற்றுக்கு 22 பேர் உயிரிழந்துள்ளனர். எந்தெந்த மருத்துவனைகளில் எத்தனை பேர் உயிரிழந்துளனர் என்பது குறித்த விவரங்கள் பின்வருமாறு:

ஸ்டான்லி  அரசு மருத்துவமனை -7

ஓமந்தூரார் அரசு மருத்துவமனை-4

மியாட் மருத்துவமனை -1

கே.எம். சி மருத்துவமனை -3

ராஜீவ் காந்தி மருத்துவமனை -5

அப்போலோ மருத்துவமனை – 1

ராமச் சந்திரா மருத்துவமனை -1

நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனா தொற்றால் 44 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா அறிகுறி – மருத்துவமனையில் சிகிச்சை

 

 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.