விழுப்புரம் அருகே காய்ச்சல் காரணமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற சிறுவனை பத்தடி தூரத்தில் இருந்தே டார்ச் லைட் அடித்து மருத்துவர் பரிசோதித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கண்டமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் காய்ச்சல் காரணமாக மருத்துவரை பார்க்க சென்றுள்ளான். அப்போது மருத்துவர் தனிமனித இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என்கிற காரணத்தைக் காட்டி பத்தடி தூரத்தில் இருந்து டார்ச் லைட் அடித்து சிறுவனை வாயைத் திறக்கச் சொல்லி மருத்துவம் பார்த்துள்ளார்.
பின்னர், சிறுவனுக்கு அவர் மருந்தும் எழுதி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட சுகாதார அலுவலர்களை பலமுறை தொடர்பு கொண்டும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.