மதுரையில் கொரானா தடுப்பு பணியாக நூறு வார்டுகளிலும் ஒரு மாதத்திற்கு மேல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் விசாகன் அறிவித்துள்ளார்.

 image

மதுரையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் படி மதுரையின் அனைத்துப் பகுதிகளிலும் கபசுரக்குடிநீர் வழங்குதல், ஜிங்க், ஆல்சனிகா ஆல்பம், உள்ளிட்ட மாத்திரைகள் வழங்குதல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகளை மதுரை மாநகராட்சி முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.

image

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியாக மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 155 இடங்களில் ஒரு மாதத்திற்கு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திட மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்கள் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் கலந்துகொண்டு உடல்நலத்தை பரிசோதித்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.