ஒடிசாவில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் தமிழகத்தை சேர்ந்தவர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டத்தின் கங்கதாபாத் காவல்நிலைய எல்லைக்குப்பட்ட பகுதியில் பீகாரை சேர்ந்த கேப்டன் சஞ்ஜிப் குமார் ஜா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி அனிஸ் பாத்திமா ஆகியோர் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தனர்.
“வேடந்தாங்கலை சிதைக்க முனைவது கண்டனத்திற்குரியது” : டிடிவி தினகரன்
அப்போது எதிர்பாராத விதமாக விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் இருவருமே உயிரிழந்தனர். அவர்களின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.