செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 85 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் 1,149 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 22,333 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 804 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தைக் காணலாம்.

image

செங்கல்பட்டு – 85, கடலூர் – 8, திண்டுக்கல் – 1, கள்ளக்குறிச்சி – 2, காஞ்சிபுரம் – 16, கன்னியாகுமரி – 3, கிருஷ்ணகிரி – 1, மதுரை – 10, நாகை – 1, நாமக்கல் – 1, பெரம்பலூர் – 1, புதுக்கோட்டை – 4, ராமநாதபுரம் – 6, ராணிப்பேட்டை – 1, சேலம் – 49, சிவகங்கை – 1, தஞ்சை – 1, திருவள்ளூர் – 47, திருவண்ணாமலை – 55, திருவாரூர் – 1, தூத்துக்குடி – 10, திருச்சி – 3, வேலூர் -1, விழுப்புரம் – 1, விருதுநகர் – 2 எனப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

image

இவர்களில் பலர் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் ஆவர். இதுதவிர ரயில்வே தனிமை வார்டில் இருந்த 26 மற்றும் உள்நாட்டு விமான நிலைய தனிமை வார்டில் இருந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும் வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் தமிழகம் திரும்பிய 3 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

“தோனி என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்” – மனந்திறந்த விராட் கோலி

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 12,757 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 9 ,400 பேர் சிகிச்சை உள்ளனர். மேலும், 173 பேர் பலியாகியுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.