தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று மட்டும் 1,149 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு 1,149 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தைக் கடந்து 22,333 ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 757 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 12,757 உயர்ந்துள்ளது. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 9,400 ஆக உள்ளது. இதனிடையே கொரோனாவால் இன்றும் ஒரே நாளில் மட்டும் 13 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை மொத்தம் 173 பேர் உயிரிழந்திருக்கின்றனர். முதன்முறையாக உயிரிழப்பின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்திற்குச் சென்றுள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 804 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்து 14,802 ஆக உயர்ந்துள்ளது.