சென்னையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 204 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி 587 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 10,576 ஆக அதிகரித்துள்ளது.

image

இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணிகளில் 204 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 100 , அரசு ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் 45 , கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 30 , திருவல்லிக்கேணி கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் 29 கர்ப்பிணிகளுக்கும் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

image

இதனையடுத்து அரசு வழிகாட்டுதல் படி கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பிரசவ தேதி குறிப்பதற்கு 5 நாட்கள் முன்னதாகவே கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.