மிகப்பெரிய ராஜநாகத்தை தலையில் தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டும் வீடியோவை வனத்துறை அதிகாரி பகிர்ந்துள்ளார்
இது குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள அவர், ”வெயில்காலம்… இதனை யார்தான் விரும்பமாட்டார்கள்?. இது அபாயமானது, யாரும் முயற்சிக்க வேண்டாம்” என தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் வாவா சுரேஷ் மிகப்பெரிய ராஜநாகத்தை தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டுகிறார்.
அந்த வாவா சுரேஷ், வனவிலங்கு ஆர்வலர் மற்றும் பாம்பு நிபுணர் ஆவார். குடியிருப்பு பகுதிகளுக்குள் வரும் பாம்புகளை பாதுகாப்பாக பிடித்து வனத்துக்குள் விடுவதை வழக்கமாக சுரேஷ் கொண்டுள்ளார்.
இந்த வீடியோவை பலர் ஆச்சரியமாக பார்த்தாலும், சிலர் எதிர்ப்புகளும் தெரிவித்துள்ளனர். இது போன்ற வீடியோக்களை பதிவிடுவதால் மக்களும் இதைப்போல செய்துபார்க்க முயற்சிப்பார்கள் என்றும், இது ஆபத்தானது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்
Summer time..
And who doesn’t like a nice head bath?Can be dangerous. Please don’t try. pic.twitter.com/ACJpJCPCUq
— Susanta Nanda IFS (@susantananda3) May 24, 2020