கொரோனா வைரஸுக்காக புதிய செயலி ஒன்றை ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ளன.
உலகம்முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்க உலக நாடுகள் முழுவதும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் சமூகப் பரவலால் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்காகக் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இணைந்து புதிய செயலி ஒன்றை வெளியிட்டுள்ளன.
இந்தச் செயலியைக் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். பின்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்பிலிருந்திருந்தால் அவர் தெரிவிக்கலாம். இதன்மூலம் கொரோனா வைரஸ் உள்ள நபரையும், அவருடன் தொடர்பிலிருந்தவர்களையும் இந்தச் செயலியை வைத்திருப்பவர்கள் அறிந்துகொள்ளலாம்.
இதனால் சமூகப் பரவலைத் தடுக்க முடியும் என நம்பப்படுகிறது. டிராஃபிக் ஜாம் அப் செயல்படுவது போல இது கொரோனா வைரஸ் பாதிப்பு உடையவர்களை அடையாளம் காட்டும் எனப்படுகிறது. இந்தச் செயலியை அமெரிக்கா மற்றும் 22 நாடுகள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. அதேசமயம் இந்தச் செயலியின் மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டுள்ளன.