(கோப்பு புகைப்படம்)

புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,756 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,293 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,455 ஆக உள்ளது.

புதுச்சேரியில் கொரோனா தொற்று 12 பேருக்கு உறுதியாகியிருந்த நிலையில் தற்போது மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி அடுத்த அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்த 37 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆனது. இதையடுத்து அந்த நபர், புதுச்சேரி அரசு மருத்துவகல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று நின்று விட்டது ...

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ள நிலையில் 9 பேர் குணமடைந்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.