டெல்லியிலும் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டுவரி உயர்த்தப்பட்டுள்ளது
தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரி உயர்த்தப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.25ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50ம் உயர்த்தப்பட்டது.
ஊரடங்கு நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் டெல்லியிலும் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டுவரி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.67ம், டீசல் விலை லிட்டருக்கு, ரூ.7.10ம் உயர்த்தப்பட்டுள்ளது.