இந்திய வீரர் ஷிகர் தவான் மற்றும் ஆஸ்திரேலிய வீரங்கானை எல்லிஸ் பெர்ரியுடன் தான் இரவு விருந்து உண்ண விரும்புவதாக முரளி விஜய் தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணியின் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டக்காரருமான முரளி விஜய் தனக்கு யாருடன் இரவு விருந்து உண்ண விருப்பம் என தெரிவித்திருந்தார். அதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும், தனது நண்பருமான ஷிகர் தவானுடன் இரவு உணவு உண்ண எந்த நாளும் தயார் என தெரிவித்திருந்தார். தவான் நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்றும், அவர் ஹிந்தி பேசுவார், அதை தான் தமிழில் கூறுவேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

image

அத்துடன் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான வீராங்கனை எல்லிஸ் பெர்ரியுடன் இரவு உணவு சாப்பிட விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். ஏனென்றால், அவர் அழகானவர் என்று குறிப்பிட்டிருந்தார்.

image

முரளி விஜய் கருத்துத்துக்கு கிண்டலாக பதிலளித்துள்ள எல்லிஸ், “முரளி விஜய் டின்னருக்கு பணம் செலுத்துவார் என நம்புகிறேன். ஏனென்றால் அது அவருக்கு மிகவும் பிடித்தமானது. இதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகள் அனுமதிக்க மறுப்பு : சிகிச்சையின்றி இறந்த முதியவர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.