கொரோனாவால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளா்கள் உயிரிழந்தால், அவா்களின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஒடிஷா மாநில முதல்வா் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தும் கொரோனாவுக்கு எதிராக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் என பல தரப்பினரும் போராடி வருகின்றனர். அவ்வப்போது அவர்களும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் பல மாநிலங்களில் கொரோனாவுக்கு எதிராக போராடும் ஊழியர்களுக்கு காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

image

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளா்கள் உயிரிழந்தால், அவா்களின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஒடிஷா மாநில முதல்வா் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வரும் ஒடிசா பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் பத்திரிகையாளர்கள் குறித்து பேசிய முதலமைச்சர், கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க பத்திரிகையாளர்கள் பல்வேறு சிரமங்களுடன் பணியாற்றுகின்றனர் என தெரிவித்தார்.

image

நேற்று நடந்த பிரதமர் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஜூன் வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென ஒடிசா கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தந்தையின் இறுதி சடங்கை வீடியோ காலில் பார்க்க முருகனுக்கு அனுமதி மறுப்பு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.