கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி செப்டம்பர் இறுதியில் தயாராகிவிடும் என புனேவில் உள்ள இந்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

image

உலகையே புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரசுக்குத் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காகப் பல நாடுகளும், பல நிறுவனங்களும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. உலகம் முழுவதும் சுமார் 100க்கும் அதிகமான தடுப்பூசிகள் தற்போது ஆராய்ச்சியில் உள்ளதாகத் தெரிகிறது. புனேவைச் சேர்ந்த செரும் என்ற நிறுவனம், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் கொரோனா வைரசுக்குத் தடுப்பூசி தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

 

image

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்த ஆய்வு மையத்தின் தலைவர் பூணம்வாலா, தங்களது தடுப்பூசி மனிதர்களிடம் செலுத்தப்பட்டு ஆய்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இறுதி செய்யப்பட்டு, செப்டம்பர் மாத இறுதியில் தயாராகிவிடும் என்றார். மேலும், மருந்தின் விலை சுமார் ஆயிரம் ரூபாய் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.